முன்னாள் ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆனால் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி அய்வரி செய்திகள் முதலில் இந்த தகவலை வெளியிட்டிருந்தது.
இதுதொடர்பாக அய்வரி செய்திப்பிரிவை தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸின் ஊடகப்பிரிவு, இந்தத் தகவலை நிராகரிப்பதாக தெரிவித்தது.