பஸ் கட்டணத்தை விட ரயில் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும் வகையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கான கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இன்று (24) பாராளுமன்றில் உரையாற்றும் போது கூறினார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த விடயங்களாவன,
பயணச் சீட்டு வழங்கல், ஆசன முன்பதிவு போன்றவற்றை மூன்று மாதங்களுக்குள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவோம்.
பின்னர் ரயில் கட்டணத்தை பஸ் கட்டணத்தை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக வைத்திருக்கக் கொள்கை முடிவு எடுப்பதுடன், அதன்படி கட்டண திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றார்.