யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் பதின்ம வயதுச் சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு நபர் போதைப்பொருளுடன் முன்னதாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர்களும் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய 19 – 26 வயதுக்குட்பட்ட இளைஞர்களே 14 வயது சிறுமியை தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேநேரம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.