இந்தியாவையும் அமெரிக்காவை கண்காணிப்பதற்காக சீனா இலங்கையில் பாரிய ரேடார் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரேடார் ஊடாக இந்தியாவின் கூடங்குளம், கல்பாக்கம் ஆகிய அணுமின் நிலையங்களையும் ஏனைய பல இடங்களையும் கண்காணிக்க முடியும் என்று த எக்கொனமிக்டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்காவின் இராணுவ தளமாக உள்ள டியாகோ கார்சியாவையும் கண்காணிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.