பசறை, கோணக்கலை லோவர் டிவிஷன் பகுதியில் தோட்ட தொழில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்கள் 11 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியொருவரும் குளவிக் கொட்டுக்குள்ளாகியுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களில் 07 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
ஏனைய நான்கு தொழிலாளர்களும், முச்சக்கர வண்டியின் சாரதியுமாக மொத்தம் 5 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.