யாழில் இடம்பெற்ற மற்றுமோர் பெளத்த விஹாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு

1 year ago
Sri Lanka
aivarree.com

யாழ்ப்பாணத்தில் மற்றுமோர் பெளத்த விஹாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு இன்று காலை காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வுக்கு பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள குறித்த விகாரை யாழிலேயே அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விகாரையிலேயே கலசம் வைக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.