முதலாம் திகதி நாட்டை முடக்குவதா? | இன்று தீர்மானம்

1 year ago
Sri Lanka
aivarree.com

மார்ச் மாதம் முதலாம் திகதி நாட்டை முழுமையாக முடக்கும் வகையில் போராட்டம் ஒன்றுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம், கல்வித்துறையினர், சுகாதார துறை என்று பல்வகையான துறைசார் ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்த உத்தேசித்துள்ளன.

இதுதொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான சந்திப்பு ஒன்று இன்று தொழிற்சங்கங்களுக்கு இடையில் நடைபெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபைப் பொறியிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை இவ்வாறான சேவைகள் அனைத்தையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடணப்படுத்தி அண்மையில் ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.