2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை இன்று (13) வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், மாணவர்கள் முதலாம் தர சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அனுப்ப வாய்ப்பு கிடைக்கும்.
விண்ணப்பங்களை ஆகஸ்ட் 18 வரை அனுப்பலாம்.