மீனவர்களை விடுவிக்க ஸ்டாலின், சங்கருக்குக் கடிதம்

2 years ago
Sri Lanka
aivarree.com

இலங்கையில் கைதான 21 தமிழக மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் திங்கள் இரவு கைதான 21 இந்திய மீனவர்களுக்கும் எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவ சமூகத்திடையே பீதியையும்,  கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


எனவே இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள நீண்டகால பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்குமாறு ஸ்டாலின் கோரியுள்ளார். 


அதேநேரம், இலங்கையில் கைதான மீனவர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகி இருந்த நிலையில், அவரைத் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Reported by
Editorial Reporter