மின்வெட்டினை வழமைப்போலவே தொடரவிருப்பதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதற்கான அனுமதியை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சாரசபை கோரியுள்ளது.
ஆனால் மின்சார சபையின் கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
பரீட்சைக்கு தோற்றும் சுமார் 310,000 பரீட்சார்த்திகளின் மனித உரிமைகளை மீற முடியாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.