இம்மாதம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருந்தது.
இதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியது.
ஆனால் அமைச்சரவை அனுமதித்த மின்சார கட்டண சீராக்கலை பல்வேறு காரணங்களுக்காக அனுமதிக்க முடியாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அமைச்சரவைக்கும் உத்தியோகப்பூர்வமாக அறியப்படுத்தியுள்ளார்.