மார்ச் மாதம் IMF உதவி கிடைக்கும் | மத்திய வங்கி ஆளுநர்

1 year ago
aivarree.com

எதிர்வரும் மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் கடனை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது.

சீனா மற்றும் பாரிஸ் கிளப் என்பன உத்தரவாதத்தை அளித்த பிறகு, சில வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறும் நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.