ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் முன்னெடுக்கப்படும் ‘ஒன்றாக மீண்டெழுவோம்’ எனும் வேலைத்திட்டத்தை தான் கடுமையாக எதிர்ப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளதாக அறிய முடிகின்றது.
முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சவை காட்சிப்படுத்திக்கொண்டு முன்னெடுக்கும் இந்த வேலை திட்டத்திற்கு இடமளிக்க முடியாது என அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மஹிந்த ராஜபக்சவிற்கு அரசியலிருந்து கௌரவமாக விடைபெறுவதற்கு இடமளித்திருக்க வேண்டும் என பிரசன்ன ரணதுங்க குறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு சிக்கலான நிலைமையில் இருந்த போது நாட்டை பொறுப்பேற்காமல் தலைவர்கள் பின்வாங்கிய போது ரணில் விக்கிரமசிங்க துணிவுடன் ஏற்றார் என்றும் அதனால் அவரின் காலை வாருவதற்கு தாம் தயாரில்லை என்றும் கூறியுள்ளார் .
மேலும் எதற்காக மீண்டும் மஹிந்த ராஜபக்சவை அரசியலுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதை அவர் நாமல் ராஜபக்சவிடம் வினவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.