மதுபான நிலையங்கள் நாளை மூடப்படுமா?

1 year ago
Sri Lanka
aivarree.com

பெரிய வெள்ளி காரணமாக நாளை (ஏப்ரல் 07) பொது விடுமுறையாக இருந்தாலும், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களும் திறந்திருக்கும் எனக் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள மதுபான சாலைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் மூடப்படும் எனவும் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.