பொலிஸ் கான்ஸ்டபிள் போதைப்பொருளுடன் கைது

1 year ago
Sri Lanka
aivarree.com

களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் கான்ஸ்டபிள் ஒருவரை போதைப்பொருளுடன் களுத்துறை பிரதேச குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் மற்றும் களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.