அடுத்த புத்தாண்டு வரை கேஸ் தட்டுப்பாடு ஏற்படாது – லிட்ரோ நிறுவனம்

1 year ago
Sri Lanka
aivarree.com

2024 தமிழ் – சிங்கள பத்தாண்டு வரைக்குமான போதிய எரிவாயு கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரஸ் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய எரிபொருள் விலைகளில் ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு, சரியான முகாமை மற்றும் வாடிக்கையாளர் லாபத்தை அதிகப்படுத்துவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வலியுறுத்தியுள்ளார்.

நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அங்கீகாரம் பெற்ற விலைச்சூத்திரத்தை பின்பற்றி, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வு மற்றும் உலகளாவிய எரிவாயு விலை வீழ்ச்சி காரணமாக உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை லிட்ரோ கேஸ் நிறுவனம் குறைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.