இராணுவ பஸ் மோதி அநியாயமாக பலியான 22 வயது யுவதி

1 year ago
Sri Lanka
aivarree.com

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது இராணுவத்தினர் சென்ற பஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுக்கு அருகில் நின்றிருந்த 22 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்ததாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு – கண்டி வீதியின் கஜுபுர என்ற இடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கட்டான பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

உயிரிழந்த யுவதி தனது காதலனுடன் சுற்றுலா பயணமொன்றை முன்னெடுத்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.