நாட்டில் இதுவரையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுகொண்டோரின் எண்ணிக்கை 55 லட்சத்து 86 665 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 3 தினங்களில் நாள் ஒன்றில் சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சன் பட்டுவந்துடாவ இதனைத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்ட போதும் நோய் நிலை மிக குறைவாகக் காணப்படுவதாக சுகாதார பிரிவு தெரிவிக்கிறது.