இதுவரையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் இதுவரையில் கொழும்பு மாநகரத்திற்குள் பூஸ்டரைப் பெற்றுக்கொண்ட எவரும் கொவிட்டினால் உயிரிழக்கவில்லை என தெரியவந்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ரூவான் விஜேயமுனி இதனை குறிப்பிட்டுள்ளார்.