பிரதமர் பதவி யாருக்கு? | மகிந்த – பசில் தரப்புக்கு இடையில் மோதல்

2 years ago
Sri Lanka
aivarree.com

அடுத்த மாதம் இலங்கையில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த பதவிக்கு முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை நியமித்துக் கொள்ள மொட்டுக் கட்சியின் சில உறுப்பினர்கள் முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பதவிக்கு மீண்டும் மகிந்த ராஜபக்சவையே நியமிக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொட்டுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் பசில் ராஜபக்சவின் வருகையை விரும்பாமையே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

சிக்கல்களின் தந்தை பசில் | பிரதமராகிறாரா? | கம்மன்பில வெளியிட்ட இரகசியங்கள்