இந்த வருடத்திற்கான வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தற்போது அவசியம் இல்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) இன்று தெரிவித்துள்ளது.
அதனால், தற்போதுள்ள பஸ் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் தொடர முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.
இந்த முடிவினை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் (NTC) தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒவ்வொரு வருடமும் ஜூன் 01 ஆம் திகதி வருடாந்த பஸ் கட்டண திருத்தம் இடம்பெறும்.
பணவீக்கம், ஒரு லிட்டர் டீசல் விலை, பராமரிப்பு செலவுகள் டயர்கள் விலை மற்றும் இதர உதிரி பாகங்களின் விலை உள்ளிட்ட பல காரணிகளை கணக்கில் கொண்டு இது கணக்கிடப்படும்.