பசும் நெய்யுடன் தாவர எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
குறிப்பாக மலையகப் பிரதேசங்களில் உள்ள கடைகளில் இந்தநிலை பொதுவாக காணப்படுவதாக சுகாதார அமைச்சின் உணவுப் பரிசோதனைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படும் பசும் நெய்யை பரிசோதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-அருண-