நாளை முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

1 year ago
Sri Lanka
aivarree.com

2022ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நாளைய தினம் (23) முதல் ஆரம்பமாகின்றன.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் ரயில்வே திணைக்களம் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன்படி மலைநாட்டு ரயில் பாதையின் ஊடாக 16 விசேட ரயில் சேவைகள் இயங்கவுள்ளன. 

அதேபோல கரையோர மார்க்கமாக 14 விசேட சேவைகள் இயங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.