இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்திய மத்திய அரசாங்கத்தின் நல்லச் செய்தியொன்றுடன் இன்று (19) இலங்கை வரவுள்ளார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உறுதிப்பாட்டை இந்தியா சர்வதேச நாணய நிதியத்திடம் நேரடியாக தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பான உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டை ஜெய்சங்கர் இலங்கைக்கு தெரியப்படுத்தவுள்ளார்.
மேலும் இலங்கையுடன், சக்திவளம் தொடர்பான இரண்டு முக்கிய உடன்படிக்கைகளிலும் அவர் கைச்சாத்திடவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை எண்ணெய் குதங்களின் முகாமை மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான சக்திவளப்பகிர்வு ஆகியனவே இந்த உடன்படிக்கைகள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.