தேர்தல் தொடர்பாக உத்தரவிட்ட 3 நீதியரசர்களுக்கு பாராளுமன்ற சிறப்புரிமை குழு அழைப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

உச்ச நீதிமன்றின் மூன்று நீதியரசர்கள் இவ்வாரம் பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான நிதி ஒதுக்கத்தை தடுப்பதற்கு எதிரான இடைக்கால தடை உத்தரவை, உச்ச நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்தது.

இந்த இடைக்கால உத்தரவு பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்தை சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பியுள்ளார்.

குறித்த உத்தரவு பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை சேதப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, குறித்த இடைக்கால தடையை வழங்கிய 3 உச்ச நீதிமன்ற நீதியரசர்களான பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் இந்த வாரம் பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.