கடும் மழை | வானிலை முன்னெச்சரிக்கை

1 year ago
Sri Lanka
aivarree.com

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை முன்னெச்சரிக்கையின் முக்கிய விடயங்கள்:-

– நாட்டின் பல பகுதிகளில் இன்று (20) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் 

– மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

– மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

– இடியுடன் கூடிய மழை பெய்கையில், தற்காலிகமாக பலத்த காற்று வீசும். 

– காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்.

– நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

– நாட்டைச் சுற்றியுள்ள கடல்கள் வழமையிலிருந்து சற்று கொந்தளிப்பாக இருக்கும்.