தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்க மறுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை பி.எஸ்.எம். சார்ள்ஸ் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார்.
இதற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.
எனினும் ஜனாதிபதி அவரது கடிதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தகவல்களை மேற்கோள்காட்டி ‘நியூஸ்வயர்’ செய்தி வெளியிட்டுள்ளது.