துருக்கி பூகம்பம் | சிறார்களுக்கான பொம்மைகளை வாரி எறிந்த கால்பந்து ரசிகர்கள்

1 year ago
World
aivarree.com

துருக்கியில்ஏற்பட்ட நில அதிர்வினால் 50,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். 

இதனால் பல சிறார்கள் அநாதரவாகியுள்ள நிலையில், அவர்களுக்கு வழங்குவதற்காக ஆயிரக்கணக்கான பொம்மைகளை கால்பந்து இரசிகர்கள் மைதானத்துக்குள் வீசி எறிந்தனர். 

துருக்கியில் பெசிக்டாஸ் மற்றும் அண்டலியாஸ்போர் கழகங்களுக்கு இடையில் நடந்த போட்டியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றது. 

குறித்த பொம்மைகள் அனைத்தும் திரட்டப்பட்டு, அநாதரவான சிறார்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.