தனுஷ்க குணதிலக ஃபேஸ்புக், இன்ஸ்டா பயன்படுத்த அனுமதி

1 year ago
SPORTS
aivarree.com

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி அவர் மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பவற்றை பயன்படுத்த முடியும்.

31 வயதான குணதிலக வியாழன் அன்று சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் தனது பிணை நிபந்தனைகளை மாற்ற விண்ணப்பித்தார்.

அவர் டிண்டரில் அறிமுகமான பெண் ஒருவரை சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்டமைக்காக, நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

குணதிலக 2022 நவம்பரில் பிணை பெற்றபோது டிண்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு முதலில் தடை விதிக்கப்பட்டார்.

ஃபெப்ரவரியில் அவரது பிணை நிபந்தனைகள் மாற்றப்பட்டன.

அதன்படி அவர் Facebook-WhatsApp பகலில் மட்டும் பயன்படுத்தலாம்.  

தற்போதய மாற்றத்தின்படி குணதிலக தனது Facebook மற்றும் Instagram கணக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

பாதிக்கப்பட்ட பெண் சமூக ஊடகங்களில் துன்புறுத்தப்படுவதாகவும், அவரது கணக்குகளை மூட வேடிண்டி நிலை ஏற்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் முன்பு கூறப்பட்டது.

குணதிலக்கவின் வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே அரசு தரப்பு மேலதிக தகவல்களை சேகரிக்க முடியும் என கூறப்படுகிறது. 

குணதிலக கடந்த ஆண்டு இலங்கையின் டி 20 உலகக் கோப்பை அணியுடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார்.

ஆனால் முதல் ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார்.

அதற்கு முன்பு தொடையில் ஏற்பட்ட காயத்தினால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஒக்டோபர் 6 ஆம் திகதி அதிகாலையில் சிட்னியின் ஹையாட் ரீஜென்சி ஹோட்டலில் அவர் கைது செய்யப்பட்டார்.

குணதிலக்கவின் வழக்கு ஏப்ரல் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

-Tamilsportsnews-