ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயொருவர் வைத்தியசாலையில் வழங்கப்பட்ட ஊசியால் ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஜா-எல வடக்கு படகம பகுதியில் வசிக்கும் 23 வயதான ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக குறித்த பெண் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ராகம வைத்தியசாலையின் சட்ட வைத்தியர், பெண்ணின் உடலில் கிருமி நுழைந்ததன் விளைவாக அவருக்கு வழங்கப்பட்டதாகவும், தடுப்பூசி காரணமாக ஏற்பட்ட ஒவ்வாமையினால் மரணம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.