இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற பாதாளவுலகக் குழு தலைவர் கஞ்சிபானை இம்ரான், ஓமான் ஊடாக டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டுபாயில் வைத்து சில ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலையில் இலங்கையில் விளக்கமறியலில் இருந்த அவர், அண்மையில் பிணை வழங்கப்பட்ட போது தமிழகத்துக்கு தப்பியோடினார்.
பின்னர் அங்கிருந்து பாகிஸ்தானுக்குக்கும் தொடர்ந்து ஓமான் ஊடாக மீண்டும் டுபாய்க்கே சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அருண பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின் படி, அவர் வெலிக்கடை சிறையில் இருந்தபோது அறிமுகமான மற்றுமொரு பாதாள உலகக்குழு தலைவருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கருதப்படுகிறது.
அவர் கொழும்பிலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல வெளிநாட்டு புலனாய்வு அமைப்பொன்று உதவியுள்ளதாகவும் பரவலாக நம்பப்படுகிறது.