மார்ச் மாதம் இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புத் திகதி அறிவிப்பு பிற்போடப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.
மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு தபால் வாக்களிப்பு தினத்தை இவ்வாரம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதனை அடுத்தவாரம் அறிவிக்க எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.