ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பசில்

1 year ago
Sri Lanka
aivarree.com

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளராக போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது. 

மொட்டு கட்சியில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

இதனைத் தடுக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தமக்கு ஆதரவாக சில பாராளுமன்ற உறுப்பினர்களை ஈர்த்துக்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதேவேளை சுகாதார கொள்கைகள் நிறுவகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, இலங்கையில் அதிகம் வெறுக்கப்படுகின்ற அரசியல்வாதியாக பசில் ராஜபக்ச கணிப்பிடப்பட்டுள்ளார். 

இந்த அறிக்கையில் இருக்கும் ஏனைய அரசியவாதிகளின் விபரங்கள் கீழுள்ள வீடியோவில் தரப்பட்டுள்ளன.