கணக்காய்வு அறிக்கை கிடைக்கும் வரையில் சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கை எதனையும் எடுப்பதில்லை என்று உச்ச நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கொன்றில் தோன்றியிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க இந்த வாக்குறுதியை உச்ச நீதிமன்றில் வழங்கினார்.
சிறிலங்கா கிரிக்கட்டின் தேசிய அணித்தேர்வுக் குழுவை கலைத்து புதிய குழுவை நியமிக்கவுள்ளதாக நேற்று (31) அவர் தெரிவித்திருந்தார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20க்கு20 உலக்கக்கிண்ணத் தொடரில் விளையாடச் சென்ற இலங்கை அணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கையின் அடிப்படையில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தார்.