ராஜகிரிய – புத்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த 2 பேர் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
தாக்குதலில் காயமடைந்த 56 வயதான ஆண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக கொழும்பில் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.