நானுஓய விபத்தில் இறந்தவர்களுக்கு அரசின் நிவாரணம் இல்லை | ஜீவன் அறிவிப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

நானுஓய – ரதெல்ல குறுக்குவீதியில் பேருந்து ஒன்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் மரணித்தனர். 

அவர்களுக்கு அரசாங்கத்தினால் நிவாரணம் எதுவும் வழங்கப்படாது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். 

இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அரசிலிருந்து நிவாரணம் வழங்கப்பட்டாலும், இவ்வாறான விபத்துகளுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனினும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக செய்யக்கூடிய விடயங்களை தாம் செய்யவிருப்பதாகவும் ஜீவன் தொண்டமான் கூறினார். 

மேலும் இறந்தவர்களின் உறவினருக்கு அனுதாபத்தம் தெரிவித்துக்கொண்ட அதேநேரம், எவ்வளவு நட்டயீடு கொடுத்தாலும் போன உயிர் மீள வரப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.