கொழும்பு குதிரை பந்தயத் திடலில் 24 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று (17) படுகொலை செய்யப்பட்டார்.
அவரது காதலனான கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இந்த கொலையை புரிந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் இரத்தக்கறை படிந்த பை என்பன மீட்கப்பட்டுள்ளன.
இரண்டு பேரும் தங்களது காதலுறவை முறித்துக் கொள்ளும் நோக்கில் கொழும்பு குதிரை பந்தய திடலில் சந்தித்துக் கொண்ட போது, குறித்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தில் வெல்லம்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்ட இளைஞரை இந்த மாதம் 30ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.