காதலர் தினம் (பெப்ரவரி 14) வருகின்ற நிலையில் அதனை முன்னிட்டு நாட்டின் சந்தையில் கஞ்சா கலந்த சொக்லட் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு உரிய அனுமதியை அதனை உற்பத்தி செய்த நிறுவனம், இலங்கை ஆயுர்வேத திணைக்களத்திடமிருந்து பெற்றிருக்கவில்லை என்று சுதேச வைத்திய ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள நிறுவனம் ஒன்றினால் இந்த சொக்லட் உற்பத்தி செய்யப்பட்டுளது.
இதில் கஞ்சா, அதிமதுரம், அஸ்வகந்தா போன்ற மூலிகைகளும் கலக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள குறித்த நிறுவனத்தின் முகாமையாளர் டபிள்யு.ஏ.தனஞ்சய, இதற்கு உரிய அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறான 1000 சொக்லட்கள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் அவை ஏற்கனவே விற்பனையாகி இருப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.