ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தி அழிக்க முயற்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வார இறுதியில் இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு அறிக்கையில் சஜித் பிரேமதாச,
- ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தவும், அழிக்கவும் சதி நடக்கிறது.
- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கட்சிக்குள் எந்த கலந்துரையாடலும் நாங்கள் மேற்கொள்ளவில்லை.
- அதேநேம் கட்சியை பிளவுபடுத்தும் மற்றும் அழிக்கும் முயற்சியில் ஈடுபடும் எந்தவொரு உறுப்பினரும் கட்சியின் ஒழுக்காற்று குழுவின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக அண்மைக்காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சஜித் பிரேமதாச மேற்கண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.