பொல்காவெல பகுதியில் வேகமாக பயணித்த காரின் மீது பொலிஸார் சற்று முன்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த கார் வேகமாக பயணித்த நிலையில், அதனை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காண்பித்துள்ளார்.
எனினும் பொலிஸாரின் உத்தரவினை மீறி கார் வேகமாக நிறுத்தாமல் பயணித்ததாயினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படாத நிலையில், காரில் பயணித்த மூன்று நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.