உள்ளுராட்சி எல்லை மீள்நிர்ணய இடைக்கால அறிக்கை அடுத்தவாரம் பிரதமர் தினேஸ்குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த இடைக்கால அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமரிடம் கையளிக்கப்படும் என்றும் இறுதி அறிக்கையை மார்ச் 31ம் திகதி கையளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த அறிக்கை வர்த்தமானியில் வெளியாக்கப்படுமாக இருந்தால், புதிதாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.