கடந்த 15ம் திகதி எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய விலை மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை.
எனினும் இந்தமாத இறுதியில் விலை மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதன்போது பெரும்பாலும் அனைத்து வகையான எரிபொருட்களும் விலையதிகரிக்கும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டமையே இதற்கான காரணமாக கூறப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே சர்வதேச சந்தையை காரணம் காட்டி லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.