எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

2 years ago
Gossip
aivarree.com

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைவாக நாளை (01) எரிபொருள் விலைகளில் மாற்றம் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வலுசக்தி அமைச்சின் தகவல்களுக்கு அமைய இம்முறை எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படும் என அறியமுடிகிறது.

குறிப்பாக டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொழிற்படாமை மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கான டொலர் பிரச்சினை உள்ளிட்ட காரணிகளால் விலை அதிகரிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் காரணமாகவே இன்று பல இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியதாகவும் கருதப்படுகிறது.