எரிபொருள் விநியோகம் | அமைச்சர் வழங்கிய அப்டேட்

1 year ago
Sri Lanka
aivarree.com

போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர இது தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கியுள்ளார். 

– கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல முனையங்களில் இருந்து இன்று காலை 6 மணிக்கு எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

– அந்த பணிகளுக்கு காவல்துறை மற்றும் ஆயுதப்படையினர் தொடர்ந்து உதவி செய்வார்கள்.  

– நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது.  

– சில எரிபொருள் நிலையங்கள் ஏப்ரல் மாத விலை திருத்தத்தை எதிர்பார்த்து எரிபொருள் கொள்வனவு செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.  

– எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தங்களுக்கு  தேவையான எரிபொருளை கொள்வனவு செய்யவும் தேவையான குறைந்தபட்ச இருப்புகளைப் பராமரிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.