ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு

1 year ago
World
aivarree.com

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சிறியளவான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. 

ரிச்டர் மானியில் 4.3 மெக்னிடியூடாக பதிவான இந்த நில அதிர்வில் பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை. 

தலைநகர் காபுலின் கிழக்கு பிராந்தியத்தில் இந்த நில அதிர்வு பதிவானதாக புவிசரிதவியல் பணிமனை தெரிவித்துள்ளது. 

கடந்த வாரம் அங்கு ஏற்பட்ட 6.3 அளவான நில அதிர்வினால் 10க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். 

மேலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்திய பிராந்தியங்களில் இவ்வாறு அண்மைய நாட்களாக தொடர்ச்சியான நில அதிர்வுகள் பதிவாகி வருவதுடன், இதுகுறித்து ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆய்வாளர் முன்னதாகவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.