உள்ளூராட்சி தேர்தல் | அஞ்சல் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

1 year ago
Sri Lanka
aivarree.com

2023ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. 

அதற்கான வேட்பு மனுக்கள் இந்த மாதம் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி நண்பகல் வரையில் ஏற்றுக்கொள்ளப்படும். 

இந்தநிலையில், குறித்த தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதியான விண்ணப்பதாரிகள், அதற்கான விண்ணப்பங்களை நாளை (5) முதல் சமர்ப்பிக்கலாம். 

எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு வரையில் இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.