பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை லாகூரில் வைத்து பொலிசார் கைது செய்ய முயன்ற போதும் அவர் அவர்களின் முயற்சிகளைத் தடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரை கைது செய்ய பொலிஸ் குழு ஒன்று இம்ரான் கானின் வீட்டிற்கு சென்ற போது அவர் அங்கு இருக்கவில்லை என்று இஸ்லாமாபாத் பொலிசார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் தேர்தல் ஆணைக்குழு அளித்த முறைப்பாட்டின் விசாரணைக்கு இன்ரான் கான் ஆஜராகாததால், கடந்த மாதம் பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு எதிரான உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.
எவ்வாறாயினும் இஸ்லாமாபாத் பொலிசாரின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், நீதிமன்ற உத்தரவு அதன் முன் ஆஜராக மட்டுமே உள்ளது என்றும் இம்ரான் கானின் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபவாத் சவுத்ரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.