இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்க பெண்கள்

1 year ago
SPORTS
aivarree.com

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்க மகளிர் அணி இன்று (24) தகுதி பெற்றது.

பலம் வாய்ந்த இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

அதன்படி தென்னாப்பிரிக்கா 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

இப்போட்டி எதிர்வரும் 26ம் திகதி நடைபெற உள்ளது.