அரச சொத்துகளை விற்றும் வேறு வழிகளிலும் 8 பில்லியன் டொலர்களை திரட்டும் இலங்கை

1 year ago
Sri Lanka
aivarree.com

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்துக்கு அப்பால் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஆண்டு 5 பில்லியன் டொலர்கள் வரையிலான கடனை இலங்கை எதிர்பார்க்கிறது.

வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ரொய்டர்ஸிடம் இதனைக் கூறியுள்ளார். 

அதற்கு மேலதிகமாக அரச சொத்துக்களை மறுசீரமைப்பதன் மூலம் 3 பில்லியன் டொலர் வரை திரட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இலங்கையின் திறைசேரி மற்றும் வெளிநாட்டு ஒதுக்கங்கள் பலப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.