அமெரிக்கா, யுக்ரெயின் விடயத்தை பயன்படுத்தி தம்மைப் போருக்கு அழைக்க முயல்வதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரஷ்யா மீது மேலும் தடைகளை விதிப்பதற்கான ஒரு காரணியாக இதனைப் பயன்படுத்துவதே அமெரிக்காவின் குறிக்கோளாகும்.
ஐரோப்பாவில் நேட்டோ கூட்டுப் படைகள் தொடர்பான ரஷ்யாவின் கரிசனைகளை அமெரிக்கா புறக்கணிக்கிறது, என்றார்.
யுக்ரேன் எல்லைக்கு அருகில், ரஷ்யத் துருப்புகள் குவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.